×

பார்வையாளர்களுக்கு அனுமதி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி

காரைக்கால், பிப். 5: காரைக்கால் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோல் காரைக்காலில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். நகர காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர காவல் நிலையத்தை அடைந்தது.

Tags : Visiting Admission Students ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...