- திமுகா
- 2026 தேர்தல்கள்
- பன்னீர் செல்வம்
- சென்னை
- பன்னீர் ரிச்சம்
- இடைக்கால நிதி நிலை கூட்டம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- எடபாடி
சென்னை : 2026 தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இடைக்கால நிதி நிலை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்ட தொடர் தொடங்கியதும், எடப்பாடி அணி அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை கூட்டத்தை புறக்கணித்தாலும், ஓ.பன்னீர்செல்வம், ஐயப்பன் ஆகிய 2 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தகவல் வெளியாகி இருந்தாலும், அரசியல் கூட்டணி மற்றும் தமிழக அரசியல் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர் செல்வம், “2026 தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். நல்லாட்சி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருப்பதால் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழ்நாட்டு மக்கள் மனதில் உள்ளதையே அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.” என கூறினார். மேலும் திமுகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, பொறுமையாக இருங்கள் என ஓபிஎஸ் பதில் அளித்தார்.
