×

நெடுஞ்சாலை கோட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நெல்லை, பிப். 5:  நெல்லை ேகாட்ட நெடுஞ்சாலைத்துறை பாளை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில சாலையான நெல்லை- பொட்டல்புதூர் சாலை 1.90 கிமீ நீளத்திற்கு ரூ.145 லட்சம் மதிப்பீட்டில் முடிந்த பணிகளுக்கு தற்போது தரக்கட்டுப்பாடு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் உடையார்பட்டி- சீவலப்பேரி சாலை ரூ.171 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இப்பணிகளை நெல்லை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசுவாமி, உதவி பொறியாளர் வேலாயுதம் உடனிருந்தனர்.

Tags : engineer inspection ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் ஏரிகள்...