×

வியாபாரிகளுக்கு கடனுதவி


திருப்பூர், பிப்.5:  சாலையோர வியாபாரிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி, திருப்பூரில் சாலையோர வியாபாரம் செய்து வருவோரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெற்று வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், கடனுதவி பெறத் தேர்வு செய்யப்பட்ட 181 பேருக்கு கடனுதவிக்கான அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலaகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கமிஷனர் சிவக்குமார் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு அனுமதி கடிதங்களை வழங்கினர். இதில், மகளிர் திட்ட இயக்குனர் கோமகன், உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : merchants ,
× RELATED வணிகர்களுக்கும் பாதுகாப்பு சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்