ஊட்டி,பிப்.5: ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான வழிகாட்டும் அலுவலகம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு ெதாழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் 10ம் தேதியன்று ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடக்கிறது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் தலைமை வகிக்க உள்ளார்.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர், ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான விவரங்களும், மேற்கல்வி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பரையாற்ற உள்ளனர். இக்கருத்தரங்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இவ்விழாவில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.