×

பெருந்துறை எம்.எல்.ஏ. குறித்து அவதூறு ஊராட்சி தலைவர், கவுன்சிலர் மீது புகார்

ஈரோடு, பிப்.5: பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் மீது அவதூறு பரப்பியதாக ஊராட்சி தலைவர், கவுன்சிலர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை விஜயமங்கலம், பொன்முடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் பெருந்துறை போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறேன். பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பி வருகின்றனர். பொன்முடி ஊராட்சி தலைவர் தங்கவேல் மற்றும் கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : panchayat leader ,Perundurai MLA ,
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...