×

1.60 கிலோ பறிமுதல் பொன்னமராவதி அருகே 13 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி, பிப்.5: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் மலையாண்டி என்பவரது வீட்டின் முன்புறம் மலைப்பாம்பு ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கிடந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் வனவர் இந்துமதி உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் வித்யா, வனக்காவலர் முதலியப்பன் ஆகியோர் சென்று பொதுமக்கள் உதவியடன் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துச்சென்று செவினிமலைப் பகுதியில் கொண்டு சென்ற விட்டனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...