×

வாலிபர் படுகாயம் திருமயம் அருகே மின்கம்பம் விழுந்து 15 நாட்களாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை

திருமயம், பிப். 5: திருமயம் அருகே மின்கம்பம் சாய்ந்து 15 நாட்களை கடந்தும் இதுவரை அதிகாரிகள் சரி செய்யாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் திருமயம் அருகே உள்ள கோட்டையூரில் இருந்து கொத்தவயல் கிராமத்துக்கு செல்லும் சாலையோர வயல் பகுதியில் இருந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது தொடர்ந்து மழை பெய்ததால் விபத்தை தவிர்ப்பதற்காக அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து விட்டு மழை நின்றதும் விழுந்த மின்கம்பம் நடப்படும் என்று தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இதனிடையே மழை நின்று 15 நாட்களை கடந்த நிலையிலும் கீழே விழுந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கீழே விழுந்த மின்கம்பத்தை உடனே சரி செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valipar Padukayam Thirumayam ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு