×

புதுகையில் ஒருவருக்கு கொரோனா

புதுக்கோட்டை, பிப். 5: புதுகையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் புதுகை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,577ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 11,384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.

Tags : Corona ,newcomers ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...