×

2 பைக்குகள் மோதிய விபத்தில் மாணவன் பலி, ஒருவர் படுகாயம்

விராலிமலை, பிப்.5: விராலிமலை அருகே இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் மாணவன் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விராலிமலை அருகே உள்ள தேன்கனியூர் பகுதியை சேர்ந்தவர் நல்லழகர். இவர் விராலிமலையில் மிட்டாய் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் நவீந்திரன் (17). மணப்பறையில் ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் தனது பைக்கில் மணப்பாறைக்கு சென்று விட்டு விராலிமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ள நம்பம்பட்டி அருகே வந்த போது நவீந்திரன் பைக்கும், மணப்பாறை நோக்கி சென்ற பைக்கும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நவீந்திரனும், மற்றொரு பைக்கை ஓட்டிவந்த மணப்பாறை கார்வாடி பகுதியை பகுதியை சேர்ந்த ஆரியப்பன் மகன் பிரபாகரன் (19) இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நவீந்திரன் செல்லும் வழியில் இறந்தார். தலையில் காயம் அடைந்த பிரபாகரன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Student ,collision ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...