×

தஞ்சையில் 13ம் தேதி

தஞ்சை, பிப்.5: தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இம்முகாமை நடத்த உள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 13ம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங், பி.இ. ஆகிய கல்வி தகுதிக்கேற்ப வேலை நாடுவோருக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு இடம் நிரப்பப்பட உள்ளன. எனவே விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறும் மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித் தகுதி மற்றும் ஊதியம் ஆகிய விவரங்களை pvtjobfairtnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362&237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...