×

5 வாகனங்கள் பறிமுதல் துறையூர் அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திறந்து வைத்தார்

துறையூர், பிப். 5: துறையூர் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் உதவியாளாகள் வந்து செல்கின்றனா். நோயாளிகள் மருத்துவரை காண சென்றவுடன் உதவியாளா–்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையை மாற்றி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக காத்திருப்போர் அறை கட்டிதர வேண்டும் என பொது மக்கள் எம்எல்ஏ ஸ்டாலின்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனை வளாகத்திலேயே புதியதாக காத்திருப்போர் அறை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது, விழாவிற்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வகித்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவா் தா்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளா் அண்ணாதுரை, ஒன்றியக்குழு தலைவா் சரண்யா மோகன்தாஸ், தலைமை மருத்துவா் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

Tags : Stalin Kumar ,Thuraiyur Government Hospital ,waiting room ,
× RELATED தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் சவுராஷ்ட்ரா காத்திருப்போர் கூடம்