முசிறி, பிப். 5:முசிறியில் டிஎஸ்பி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முசிறியில் டிஎஸ்பி அலுவலகம் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது.இதன் அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தையும்,உற்சவ மூர்த்திகள் அணிந்திருந்த 4 கிராம் மதிப்பிலான தங்க தாலி, காசு பொட்டு ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.முசிறி டிஎஸ்பி அலுவலகம் அருகே நடைபெற்றுள்ள இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.