×

வையம்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மணப்பாறை, பிப்.5: வையம்பட்டி அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் .மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம்.முகவனூர் ஊராட்சி . பாம்பாட்டி பட்டி மற்றும் அய்யம்பாளையம் கிராம மக்கள் நேற்று 100 நாள் வேலை கேட்டு கரூர் - வையம்பட்டி சாலையில் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Vaiyampatti ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி