×

கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு கொலையா என விசாரணை

சேலம், பிப்.5:சேலம் அருகேயுள்ள வட்டக்காடு தேக்கம்பட்டியை சேர்ந்தவர் தாண்டவன். இவரது மகன் சந்துரு(22). சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்துவந்தார். பெற்றோர் வீட்டில் தங்காமல், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1ம்தேதி முதல் சந்துருவை காணவில்லை.

எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஊர் கிணற்றுக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு பார்த்தபோது சந்துரு, சடலமாக மிதந்தார். இதுகுறித்து தகவலின்பேரின் கருப்பூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபழக்கம் கொண்ட சந்துரு, அவரே தவறி விழுந்தாரா? அல்லது யாராவது அடித்து கொன்று வீசினார்களா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : murder ,Karuppur ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...