திருச்செங்கோடு, பிப். 5: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருச்செங்கோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார். இதில் பொருளாளர் குமார், பொதுக்குழு உறுப்பினாகள் அன்பழகன், செல்வராசு, அம்பிகா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ், செழியன், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் பரமானந்தம், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம், மல்லை பழனிவேல், ஏ.பிஆர் சண்முகம், தனராசு, தங்கவேல், நகர செயலாளர்கள் தாண்டவன் கார்த்தி, ரவிச்சந்திரன், செல்வம், பேரூர் செயலாளர்கள் ரமேஷ் பாபு, திருமலை, கருணாநிதி, மகாமுனி, ராமலிங்கம், கார்த்திராஜ், ராமமூர்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் மதுரா செந்தில், ஜிஜேந்திரன், மொளசி ராஜமாணிக்கம், பழனிவேல், சரவணமுருகன், மீன் செல்வம், கதிர்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வரும் 13ம்தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தோ்தல் பரப்புரையில் கலந்துகொள்ள வருகை தரும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், அவரது நிகழ்ச்சிகளில் திரளாக கலந்து கொள்ளவும் முடிவானது. மேலும், மார்ச் 1ம்தேதி மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடுவது. அதற்காக ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.