×

திருவில்லியில் சாலை பாதுகாப்பு டூவீலர் பேரணி நீதிபதி துவக்கி வைத்தார்

திருவில்லிபுத்தூர், பிப். 5: திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம், வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, வெஸ்டன் ஹாட்ஸ் ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து 32வது சாலை பாதுகாப்பு மாத விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக மாவட்ட நீதிமன்றம் அருகே காவல்துறையினர் நீதித்துறையினர், பொதுமக்கள் பங்கேற்ற டூவீலர் பேரணி நடைபெற்றது இதை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா துவக்கி வைத்தார். நிகழ்வில் ஹெல்மெட் அணிந்து வந்த சிலருக்கு நினைவு பரிசும் வழங்கினார்.நீதிமன்றத்தில் துவங்கிய இப்பேரணி நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ராமகிருஷ்ணாபுரத்தில் பேரணி நிறைவு பெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களை மாவட்ட நீதிபதி ,வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் போக்குவரத்து வட்டார ஆய்வாளர் ஜாஸ்மின், காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் பாராட்டி பேசினர். சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி மாரியப்பன் உட்பட பல்வேறு அரசுத் துறையினர் பங்கேற்றனர்.

சாத்தூர்சாத்தூர் காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மேட் அணிந்து டூவீலர் பேரணி நடைபெற்றது. சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகர போக்குவரத்து ஆய்வாளர்கள் சொர்ணமணி, வெங்கடாசலபதி, இன்ஸ்பெக்டர்கள் செல்வம், செல்லப்பாண்டி முன்னிலை வகித்தனர்.

Tags : rally ,judge ,Tiruvilli ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...