மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 174 புள்ளிகள் அதிகரித்து 83,451 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 25,725 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
