×

விளையாட்டு வினையானது வாலிபர் கயிறு இறுக்கி சாவு

போடி, பிப். 5: போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்தவர் விக்ரம் (28), விவசாயி. இவருக்கும், போடி புதூரைச் சேர்ந்த உறவினர் பெண் நதியாவுக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவியை மிரட்டுவதற்காக, தூக்கு மாட்டிக் கொள்வேன் என விக்ரம் கழுத்தில் கயிற்றை மாட்டி விளையாட்டு காட்டியுள்ளார். அப்போது கயிறு கழுத்தை இறுக்க கூச்சலிட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விக்ரம் இறந்ததாக தெரிவித்துள்ளனர். மனைவி நித்யா அளித்த புகாரின்படி போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆர்டிஓ விசாரனைக்கு மாற்றினர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ