×

ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்

பரமக்குடி, பிப்.5: திமுக ஆட்சி அமைந்தவுடன் ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும், என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பரமக்குடியில் நேற்று நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். புகார் மனு கொடுத்த 20 நபர்களை தேர்வு செய்து அவர்களுடைய புகாருக்கு பதில் அளித்தார்.அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘சாயல்குடி-மலட்டாறு தடுப்பணையை உயர்த்தி கட்ட, வரத்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சப்பட்டி ஓடை மராமத்து செய்யப்படும். சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக தாழ்வான பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்காத அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சாகுற காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வது போல் கடைசி காலத்தில் நீர்நிலைகளை தூர்வாருவது என பொதுமக்களை ஏமாற்றி வருகின்றது இந்த அதிமுக அரசு. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...