×

திருமங்கலத்தில் டூவீலரில் லாரி மோதி அரிசி வியாபாரி பலி

திருமங்கலம், பிப்.5: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மின்வாரியம் பஸ்ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் டூவீலரில் சென்றார். நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலைசிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் அடையாளம் தெரியாத அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முரளிசங்கர் மகன் ராமநாதன்(29) என்பதும் அரிசி கடை வைத்துள்ளதும், வியாபார விஷயமாக திருமங்கலம் வந்துவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. லாரி டிரைவர் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தேசிங்குராஜாவை(34) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,`` கப்பலூரில் நுகர்பொருள்வாணிப கிடங்கிற்கான திறந்தவெளி நெல்கிடங்கு உள்ளது. இதற்கு நெல் ஏற்றி வரும் லாரிகள் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வரிசையாக நிற்கின்றன. இதனால் டூவீலர்கள் கூட நான்கு வழிச்சாலையில் செல்லவேண்டியுள்ளது. அப்படி நான்கு வழிச்சாலையில் இரவில் சென்ற போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே, லாரிகளை மாற்று இடத்தில் நிற்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : Larry Moti ,Thirumangalam ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி