மதுரை, பிப். 5: சட்டமன்ற தேர்தலையொட்டி, மதுரை மாவட்ட வருவாய்த்துறையில், 35 துணை தாசில்தார்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அந்த மாறுதல் உத்தரவில், உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலக தலைமை உதவியாளர் இசக்கி முத்துக்குமார் வாடிப்பட்டி தாலுகா தேர்தல் பிரிவுக்கும், மதுரை தெற்கு வட்ட மண்டல துணை தாசில்தார் செல்லபாண்டியன் மதுரை கிழக்கு தாலுகா தேர்தல் பிரிவுக்கும், உசிலம்பட்டி தாலுகா துணை தாசில்தார் பாலகுமார் இதே தாலுகாவில், தேர்தல் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். உசிலம்பட்டி துணை தாசில்தார் ராஜன், மதுரை மேற்கு தாலுகா தேர்தல் பிரிவுக்கும், திருங்கலம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ராஜவேல் இதே தாலுகாவில் தேர்தல் பிரிவுக்கும், பேரையூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் கருப்பையா கள்ளிக்குடி தாலுகா தேர்தல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கள்ளிக்குடி வட்ட வழங்கல் அலுவலர் விவேகானந்தன் மதுரை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவுக்கும், பேரையூர் தாலுகா துணை தாசில்தார் அல்ஹாபுதீன் மேலூர் தாலுகா தேர்தல் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
மேலூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டபிரபு வரவேற்பு துணைத்தாசில்தாராகவும், உசிலம்பட்டி மண்டல துணை தாசில்தார் ரெங்கலெட்சுமி மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சுத்த நகல் பிரிவு கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் திருமங்கலம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், இங்குள்ள துணை தாசில்தார் ஜெயராஜ், சுத்த நகல் பிரிவு கண்காணிப்பாளராகவும், பேரையூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முரளிதரன் மதுரை தெற்கு தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி தாலுகா துணை தாசில்தார் சுபேதா நகர்ப்புற நில உச்சவரம்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளர் மீனாகுமாரி ஊ பிரிவு தலைமை உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கிழக்கு மண்டல துணை தாசில்தார் கல்யாணசுந்தரம் வாடிப்பட்டி தாலுகாவிற்கும், திருப்பரங்குன்றம் தாலுகா துணை தாசில்தார் உசிலம்பட்டி தாலுகாவிற்கும், உதவி ஆணையர் நகர்ப்புற நில உச்சவரம்பு அலுவலக கண்காணிப்பாளர் மனேஷ்குமார் கலெக்டர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலூர் தாலுகா துணை தாசில்தார் தனபாண்டி டி பிரிவு தலைமை உதவியாளராகவும், மதுரை வடக்கு துணை தாசில்தார் முருகேசன் இதே தாலுகாவிலும், வாடிப்பட்டி துணை தாசில்தார் வனிதா உசிலம்பட்டி தாலுகாவிற்கும், திருமங்கலம் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அழகர்சாமி இதே தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை தெற்கு தாலுகா துணை தாசில்தார் மகேந்திரபிரபு வாடிப்பட்டி தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், இத்தாலுகா துணை தாசில்தார் கோமதி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கும், உசிலம்பட்டி தாலுகா தேர்தல் பிரிவு தாசில்தார் மணிகண்டன் மதுரை கிழக்கு தாலுகா அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜலெட்சுமி இதே தாலுகாவிலும், மேலூர் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மோகன்சுந்தர் மதுரை தெற்கு தாலுகாவிற்கும், மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் செந்தீஸ்வரி மதுரை வடக்கு தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். கள்ளிக்குடி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மாலதி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கும், கலெக்டர் அலுவலக ஊ பிரிவு தலைமை உதவியாளர் லோகேஸ்வரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கும், மேலூர் தாலுகா துணை தாசில்தார் லெட்சுமிபிரியா உசிலம்பட்டி தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை கிழக்கு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பூமாயி மேலூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளர் மணிகன்டன், மேலூர் தாலுகா அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இத்துடன், வாடிப்பட்டி தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தெய்வேந்திரன் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கும், மதுரை தெற்கு தாலுகா துணை தாசில்தார் மகேஸ்வரி மேலூர் தாலுகா அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.