×

விமான நிலையம் வந்த பார்சலில் வெடிகுண்டா? மதுரையில் பரபரப்பு

அவனியாபுரம், பிப். 5: மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் டெல்லி செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக நாகர்கோவிலில் இருந்து வந்த பார்சலை ஸ்கேன் செய்தபோது அதில் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருப்பதாக அலாரம் அடித்தது. இதனையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சரக்குப் பெட்டகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றினர். பின் வெடிகுண்டு  மூலப்பொருட்கள் இருப்பதாக சொன்ன பார்சலை கைப்பற்றினர்.  தகவலறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பார்சலை பிரித்து அதை சோதனையிடுமாறு அறிவுறுத்தினர். தகுந்த பாதுகாப்புடன் சோதனையிட்ட போது, அதில் செல்போன் சார்ஜர் போன்ற பொருள் மட்டுமே இருந்தது. இவை அனைத்தும் அலுமினிய ஃபாயிலில் மூடி வைத்து இருந்ததால், ஸ்கேனில் வெடிகுண்டு மூலப்பொருள் இருப்பதாக காட்டியுள்ளதை அறிந்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : airport ,Madurai ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...