×

பெண்ணிடம் சில்மிஷம் ராணுவ வீரர் கைது

சென்னை: கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த ராணுவ வீரர், தனது 18 வயது மகளை புதுச்சேரியில்  உள்ள கல்லூரியில் சேர்க்க நேற்று முன்தினம் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஸ்-4 பெட்டியில் பயணம் செய்துள்ளார். காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயிலில் பயணித்த வாலிபர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டதால், அந்த வாலிபர் தப்ப முயன்றார். சக பயணிகள் அவரை பிடித்து,  சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கேரள மாநிலம், பயனூர் பகுதியை சேர்ந்த பைஜூ குட்டமால் (33) என்பதும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புபடை போலீசாக பணி புரிந்து வருவதும், தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள 15வது பட்டாலியன் மையத்துக்கு செல்வதும் தெரியவந்தது. சம்பவம் காட்பாடியில் நடந்ததால் அவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Silmisham ,soldier ,
× RELATED ராணுவ வீரர் மாயம்