திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பாலசுப்பிரமனியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் என்.பி.மாரிமுத்து வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார் யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியாசெல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.