×

அண்ணாவி்ன் 52வது நினைவு தினம் சிலைக்கு திமுக, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, பிப். 4: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி திருச்சியில் பல்வேறு கட்சியினர் சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மத்திய மாவட்ட திமுக சார்பில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் ரமேஷ், மோகன்தாஸ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாவட்ட திமுக சார்பில் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் விஎன் நகரில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேமுதிக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். மேலும் பல்வேறு கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முசிறி: முசிறியில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன். ராஜேந்திரன் ,மாவட்ட கவுன்சிலர் கே.பி.கே.சுந்தர்ராஜ், தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர் புனிதராணி மகேஸ்வரன்மற்றும் பலர் அண்ணா சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொட்டியத்தில் திமுக நகர செயலாளர் நிர்மலா சந்திரசேகரன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திமுகவினர் அதனைதொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் சென்றனர். தா.பேட்டை கடைவீதியில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நினைவு தின நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள்கணேசன் மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

லால்குடி: லால்குடி கீழவீதியில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன்,நகர செயலாளர் துரை மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி,மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துறையூர்: துறையூரில் திருச்சி வடக்கு புறநகர் மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் எம்எல்ஏஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிட்டப்பா, துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், துணைத் தலைவர் புவனேஸ்வரி தங்கையன் உள்ளிட்டே–்ார் கலந்து கொண்டனர்.

மணப்பாறை : அண்ணாநினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறையில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், சேது, பழனிசாமி, பொன்னுசாமி, திருமலைசாமிநாதர், முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, மாவட்ட நிர்வாகிகள் ராஜ்மோகன், நெட்ஸ் இளங்கோ, தர்ராவ், மீனவரணி பொன்னுசாமி, வக்கீல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Anna ,Remembrance Day ,
× RELATED திமுகவுக்கு அதிமமுக முழுஆதரவு