×

ஒருவர் கைது வலங்கைமானில் தமிழ்பால் விநியோக மையம் திறப்பு விழா

வலங்கைமான், பிப்.4: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா டிஎஸ்ஆர் வணிக வளாகம் குச்சிபாளையத்தெருவில் கடந்த 27ம்தேதி (புதன்கிழமை) தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவனத்தின் புதிய விநியோக மைய திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளரான அந்நிறுவன விற்பனை மேலாளர் சீனிவாசன் முன்னிலையில், வலங்கைமான் வர்த்தக சங்க தலைவர் பரதாழ்வார் மையத்தை திறந்து வைத்தார். தொழிலதிபர் ராஜமோகன் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார். விழாவில் தமிழ் பால் நிறுவன விற்பனை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விநியோக மைய விநியோகஸ்தரான கிஷோர் ஏஜென்சி மாசிலாமணி அனைவரையும் வரவேற்றார். விழாவின் சிறப்பு அழைப்பாளர், நிறுவனத்தின் விற்பனை மேலாளருமான சீனிவாசன் பேசுகையில், இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கும், பால் விற்பனையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், வரும் காலங்களில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகா வாரியாக தமிழ் பால் விநியோக மையங்கள் புதிதாக அதிக அளவில் திறக்கப்பட உள்ளது என்றார்.

Tags : distribution center opening ceremony ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை