×

20 பேர் கைது மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

1திருவாரூர், பிப்.4: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருவாரூரில் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளின் தனியார்மயத்தை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் 2020 மின் மசோதா சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ மற்றும் பெடரேஷன் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச திட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மத்திய சங்க திட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைவர் சகாயராஜ், பெடரேஷன் ஊழியர் சங்க செயலாளர் முருகஅருள் மற்றும் சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் ஹனிபா, மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Trade unions ,government ,arrests ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...