×

கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம், பிப்.4: பாபநாசம் சண்முகவள்ளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காலை திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்தபிள்ளையார், திருமகள் வழிபாடு, மண் எடுத்தல், முளையிடுதல், மாலை திருக்குடத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து வேள்விச் சாலைக்கு எழுந்தருளல், இரவு தவம் இயற்றும் தலைவிக்கு முதல் கால வேள்வி நடைபெற்றது. கடந்த 1ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி, திருக் குடங்கள் வேள்வி சாலையில் இருந்து புறப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு