பாபநாசம், பிப்.4: பாபநாசம் அடுத்த ராஜகிரி, பண்டாரவாடை புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா நடைபெற்றது. கடந்த 24ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி இரவு ஐந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் சம்மனசு, செபஸ்தியார், சூசையப்பர், உயிர்த்த ஏசு நாதர், காணிக்கை மாதா சொரூபம் தேரில் அலங்கரிக்கப்பட்டு பவனியாக கொண்டு செல்லப்பட்டது. முக்கிய வீதிகளில் சென்ற தேரோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தேர்கள் ஆலயத்தை சென்றடைந்ததும் பாபநாசம் பங்குத் தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றினார்.