புதுக்கோட்டை, பிப். 4: புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த அப்துல்லா. மாற்றுத்திறனாளியான இவர் சிறு சிறு வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று புதுக்கோட்டை பல்லவன் குளத்துக்கு சென்றார். அப்போது தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இந்நிலையில் நேற்று மாலை அப்துல்லா உடல் தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து நகர காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.