×

அறந்தாங்கி அருகே சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக பிரமுகரால் பரபரப்பு

அறந்தாங்கி, பிப். 4: அறந்தாங்கி அருகே சசிகலாவை வரவேற்று அதிமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த தீயத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் கருப்பையா. அதிமுக பிரமுகரான இவர், சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் டிடிவி தினகரன் தனியாக பிரிந்து அமமுகவை துவங்கியபோதும் அதிமுகவிலேயே தொடர்ந்து கருப்பையா பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சிறையில் இருந்து சசிகலா விடுதலையான நிலையில் கருப்பையா தனது பெயர், பதவி, போட்டோவுடன் போஸ்டர் அச்சடித்து ஆவுடையார்கோவில் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் தனது நண்பர்களான ஆவுடையார்கோவிலை சேர்ந்த முருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட 3 பேர் படங்களையும் அச்சடித்துள்ளார். மேலும் போஸ்டரில் அதிமுகவின் பொது செயலாளர் சின்னம்மா அவர்களே வருக வருக என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சசிகலாவை வரவேற்று முதல்வர், துணை முதல்வர் படங்களுடன் போஸ்டர்களை அதிமுக பிரமுகர் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Sasikala ,Aranthangi ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...