×

காணாமல்போன குழந்தைகளை மீட்டு ஒப்படைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னமராவதி, பிப். 4: பொன்னமராவதியில் மாவட்ட காவல்துறை மற்றும் 1098 சைல்டுலைன் சார்பில் புன்னகையை தேடி எனும் காணாமல் போனவர்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் விழிப்புணர்வு நடந்தது. பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், பொதுமக்களிடம் குழந்தைகள் தடுப்பு திருமணம், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் சசிகலா தலைமையில் 1098 களப்பணியாளர் பூங்கொடி மற்றும் களப்பணியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு களப்பணியாளர் குமார், குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...