×

அரியலூர் எஸ்பி உள்பட காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர், பிப்.4: அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்மணி மற்றும் நலவாழ்வு துணை இயக்குனர் மருத்துவர் ஹேம்சந்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். தடுப்பூசி சுகாதாரத்துறை முழுவதும் எடுத்துக்கொண்ட பின்னர், தற்போது காவல்துறைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் இடையை உள்ள அச்சத்தை போக்கும் விதமாக அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் தடுப்பூசி எடுத்துக் போட்டுக்கொண்டார். இதேபோன்று ஜெயங்கொண்டம் டிஎஸ்பி. தேவராஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், டி.பழூர் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் காவல்துறையினர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தா.பழூர்: தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் புகழேந்தி மேற்பார்வையில் தா.பழூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தா.பழூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் முதல் தடுப்பூசியை போட்டு கொண்டார். இதனை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

Tags : Corona ,Ariyalur SP ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...