×

ஆர்ப்பாட்டம்

கீழ்வேளூர், பிப். 4: கீழ்வேளூர் ஒக்கூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு 30 சுமைதூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் நடைபெறாத நிலையில் தற்போது துவங்கியது. ஆனால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் உள்ளூர் பகுதி தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதனால் மீண்டும் வேலை கேட்டு ஒக்கூர் மின் உற்பத்தி நிலையம் முன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் திருக்குமரன், செயலாளர் முருகவேல் தலைமை வகித்தனர். ஒக்கூர் ஊராட்சி தலைவர் ஜெயமாலா ரமேஷ், நாகூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவாத்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்