×

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கரூர், பிப்.4: தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கிளை பொருளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், தனபால், பால்ராஜ், வீரமணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். செந்தில்குமார் நன்றி கூறினார். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : Electricity workers ,privatization ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில்...