×

பூந்தமல்லி கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண்

மதுராந்தகம்:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணல்மேடு ஊராட்சியை சேர்ந்தவர் கருணாகரன் (45). நேற்று முன்தினம் மாலை கருணாகரன், வெள்ளவேடு பாலத்தின் அருகே நின்றிருந்தார். அப்போது சிலர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இதுதொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், கருணாகரன் கொலை வழக்கு தொடர்பாக, வெள்ளவேடு கிராமத்தை சேர்ந்த விஷ்வா (19), தமிழ்ச்செல்வன் (21), திருமழிசை அஸ்வின்குமார் (23), சரவணன் (22), திருவள்ளூர் இளமுருகன் (22) ஆகியோர் மதுராந்தகம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

Tags : court ,Poonamallee ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...