×

பணியாளர்கள் பற்றாக்குறை சிவகாசி ஆதார் சேவை மையத்திற்கு பூட்டு

சிவகாசி, பிப் 4: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வருகின்றனர். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறுவதால் இதில் ஆதார் அட்டையில் செல் நம்பர் மாற்ற ஏராளமான பொதுமக்கள் ஆதார் மையத்தில் குவிந்துள்ளனர்.இதனால் ஆதார் மையத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்த ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள், பணியாளர்கள் இல்லாதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஏற்கனவே 2 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் இதில் ஒருவர் வெம்பக்கோட்டைக்கு மாற்றப்பட்டதால், பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. பணியாளர் விடுமுறையில் சென்றால் ஆதார் சேவை மையம் பூட்டிக்கிடக்கிறது. பணியாளர்கள் விடுமுறை எடுத்தது தெரியாமல் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் மணிக்கணக்கில் மரத்தடியில் காத்திருக்கின்றனர்.தினமும் 20 கி.மீ, 30 கி.மீ தூரத்தில் கிராமங்களில் இருந்து வரும்பொதுமக்கள் தினமும் ஆதார் சேவை மையத்திற்கு அலையாய் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.

Tags : service center ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...