×

பேரறிஞர் அண்ணாவின் 52வது‌ நினைவு நாள்

திருவள்ளூர்: பேரறிஞர் அண்ணாவின் 52வது‌ நினைவு நாளை முன்னிட்டு மணவாள நகரில் உள்ள திருஉருவ சிலைக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே.திராவிட பக்தன், எஸ்.கே.ஆதாம், சரஸ்வதி சந்திரசேகர், பா.சிட்டிபாபு, ஒன்றிய, நகர செயலாளர்கள் கே.அரிகிருஷ்ணன் கூளூர் எம்.இராஜேந்திரன், சி.சு.ரவிச்சந்திரன், ரவீந்திரா, வி.வினோத்குமார், வக்கீல் பி.கே.நாகராஜ், தி.ஆ.கமலக்கண்ணன், டி.கே.பாபு, தா.மோதிலால், பொன்பாண்டியன், டி.செல்வகுமார், டி.சிவகுமார், தாடி நந்தா, வி.ராஜசேகர், ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார், ராமதாஸ் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும், நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினர்.

Tags : Remembrance Day ,Grandfather Anna ,
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்:...