×

காளையார்கோவில் அருகே கரடுமுரடான குறுந்தணி சாலை வாகன ஓட்டிகள் அவதி

காளையார்கோவில், பிப்.4: காளையார்கோவில் அருகே உள்ள சூசையப்பர்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட குறுந்தணி-நற்புதம் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.
காளையார்கோவில் அருகில் சூசையப்பர்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட குறுந்தனி, நற்புதம் கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை சில வருடங்களுக்கு முன் போடப்பட்டது. தற்போது சாலையின் பெரும் பகுதி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலை வழியாக குறுந்தணி, நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், வேளாங்குளம், சிலுக்கபட்டி கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செல்கின்றனர். நடப்பதற்கே லாயக்கற்ற இச்சாலையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கிராமத்தை சேர்ந்த செல்வம் கூறுகையில், சில வருடங்களுக்கு முன் போடப்பட்ட ரோடு சில மாதங்களிலே தார் மற்றும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இச்சாலை வழியாக அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றார்கள். ஆனால் கண்டு கொள்வதே இல்லை. பொது மக்களாகிய எங்களுக்கு இச்சாலையை விட்டால் வேறுவழியில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : Motorists ,road ,Kaliningrad ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...