×

பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

மதுரை, பிப். 4: மதுரை மாவட்டத்தில் 9, 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கொரேனா தொற்றுக்கு பின்னர் வரும் 8ம் தேதி 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் நேற்று முதல் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதற்குரிய படிவத்தை வழங்கி கருத்துக்களை பெற்று வருகின்றனர். இதனை அனைத்துப் பள்ளி தலைமையாசிரிகள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 2 நாட்களில் அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தவிட்டுள்ளார்.


Tags : parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்