×

நினைவு நாளை முன்னிட்டு அனைத்து கட்சியினர் மதுரை அண்ணா சிலைக்கு மரியாதை

மதுரை, பிப். 4: அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, திமுக மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்ைதவேலு, எஸ்ஸார்கோபி, பொன்.முத்துராமலிங்கம், தமிழரசி, ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஒச்சுப்பாலு, கணேசன், தனச்செல்வம், ஜெயராமன், சின்னம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதிமுக சார்பில், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். தேமுதிக மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலூர் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் தலைமையில் ஊர்வலமாக சென்ற தொண்டர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிசெழியன், குலோத்துங்கன், முன்னாள் நகர் சேர்மன் சாகுல்அமீது, திருவாதவூர் ஊராட்சி தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டிதிமுக சார்பில் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பாக உள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். முன்னதாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடேசன், சேகர், வக்கீல் பாலாஜி, விஜயலெட்சுமி முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : parties ,Madurai Anna ,Memorial Day ,occasion ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...