×

பெண்கள் தற்கொலை

நத்தம் அருகே புன்னப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (33). இவரது மனைவி சுகந்தி (30). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையத்தில் சுகந்தி கயிற்றினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜிலியம்பாறை அருகே உல்லியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (30). கணவன்- மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நாகலட்சுமி நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகலட்சுமி தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது