×

பணியின்போது வீரமரணம் ஏரல் எஸ்.ஐ பாலு படத்துக்கு நெல்லை கமிஷனர் அஞ்சலி

புதுக்கோட்டை, பிப்.4: ஏரல் அருகே பணியின் போது வீரமரணமடைந்த எஸ்ஐ பாலு படத்துக்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் அஞ்சலி செலுத்தினார்.  ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ பாலு பணியின் போது லோடு ஆட்டோவால் மோதி கொலை செய்யப்பட்டார். அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. நேற்று நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோர்  முடிவைத்தானேந்தலில் உள்ள எஸ்ஐ பாலு வீட்டிற்கு நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி பேச்சியம்மாள், மகன்  அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  உடன் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு, வைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

Tags : Nellai Commissioner ,Earl SI Balu ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...