×

பாஜ நிர்வாகியை கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஆர்ப்பாட்டம்

ஆறுமுகநேரி,பிப்.4:  நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேசிய பாஜ நிர்வாகி கல்யாணராமனை கண்டித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளல் சீதகாதி திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை துணை தலைவர் முகைதீன் தம்பி என்ற துரை தலைமை வகித்தார். துணை தலைவர் பாதுல் அஷ்ஹப் கண்டன பேருரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாஜ நிர்வாகி கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முஸ்லிம் ஐக்கிய பேரவை துணை செயலாளர்கள் நவாஸ் அகமது, எல்.எம்.இ. கைலாணி மற்றும் அனைத்து கட்சிகள், சமுதாய அமைப்பின் நிர்வாகிகள், பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வாவு சம்சுதீன் நன்றி கூறினார்.

Tags : protests ,United Assembly ,executive ,Gayalpattinam ,BJP ,
× RELATED மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக...