×

பாஜ நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி பொட்டல்புதூரில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

கடையம், பிப்.4: சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜ நிர்வாகி கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பொட்டல்புதூரில் இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தார்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முஸ்லிம்லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல்காதர் தலைமை வகித்தார். தமஜக மாவட்ட செயலாளர் கயாத்அன்ஸர், முஸ்லிம்லீக் மகளிரணி அமைப்பாளர் சபுராபேகம், மாநில இளைஞரணி துணைத்தலைவர் செய்யதுபட்டாணி, தமுமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் மீரான்முகைதீன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் இஸ்ஹாக், ஒன்றிய செயலாளர் கோதர்மைதீன், மாநில துணைச்செயலாளர் நெய்னார் முஹம்மது, பிஎப்ஐ கல்லிடை பொறுப்பாளர் ஜாஹிர்இமாம், பகுதி தலைவர் செய்யதுபாசில், எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி தலைவர் இப்ராஹிம், ஆலங்குளம் தலைவர் ஹாஜாஅலாவுதீன், செயலாளர்  அஜீஸ்அஹமது, ஜாக் அமைப்பின் மாவட்ட நிர்வாகி யூசுப் மிஸ்பாஹி, தேசிய லீக் பொறுப்பாளர் அஹ்மத்அலி, தமஜக ஜெய்லானி, திமுக ரவணசமுத்திரம் இளைஞரணி பொறுப்பாளர் ஆதம் ஜூபைர், அமமுக ஒன்றிய செயலாளர் யாக்கூப், முன்னாள் பஞ்.தலைவர் அஜீஸ்அஹமது, ரவணசமுத்திரம் ஷாபி பள்ளிவாசல் தலைவர் மக்தூம் முகைதீன், அல் அரபா டிரஸ்ட் நிறுவனர் முகம்மதுகனி, தமுமுக சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஸித்தீக் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பாஜ நிர்வாகி கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி தமிழகஅரசையும், காவல்துறையையும் வலியுறுத்தப்பட்டது.


Tags : movements ,arrest ,BJP ,executive ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...