×

விழுப்புரத்தில் 2 எஸ்ஐ உள்பட 14 பேர் மாற்றம்

விழுப்புரம், பிப். 4:  விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ உட்பட 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்.ஐ பிரகாஷ் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திலிருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கும், பிரபு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கும். எஸ்.எஸ்.ஐ பிரீத்தியு மன்னன் வெள்ளிமேடுபெட் காவல் நிலையத்திலிருந்து ரோசணை காவல் நிலையத்திற்கும், சரவணன் வானூர் காவல் நிலையத்திலிருந்து கிளியனூர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் காவலர்கள் லக்ஷ்மிநாராயணன், செல்வராஜூ ,அசோக்குமார், இளங்கோ, வெங்கடேஷ், காந்திகுமார், சென்னை மாநகர தலைமை காவல் நிலையத்திற்கும், கனகராஜன், காணை காவல் நிலையத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கும், சர்குணம் அரியலூர் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கும், ஆனந்தன், ராஜாராம், குணசேகரன், பாரதி, ஆக்தர் பாஷா, பிரபாகரன் ஆகியோரை மாற்றம் செய்ய எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : persons ,Viluppuram ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...