×

எலி பேஸ்ட் தின்ற பெண் சாவு

சங்கராபுரம், பிப். 4:  சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கடபதி மனைவி கண்ணியம்மாள்(38). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி வயிற்றுவலி அதிகமானதாக கூறப்படுகிறது.  அப்போது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை கண்ணியம்மாள் சாப்பிட்டுள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சங்கராபுரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...