×

வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது

அந்தியூர், பிப்.4:பர்கூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை கொங்காடை பகுதியை சேர்ந்தவர்கள் மாதேவன்(50), மாதன் (40). இருவரும் சகோதரர்கள். இவர்கள் கோயில்நத்தம் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காட்டுபன்றிகள் அழித்துவிடும் என்பதற்காக கன்னி வலையில் சுருக்கு வைத்திருந்தனர். இதில், எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி ஒன்று சிக்கியது. இதை, இருவரும் கொன்று சமைப்பதற்காக துண்டு, துண்டாக வெட்டி உள்ளனர்.

இந்த தகவல் பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக மாதேவன், மாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட வனஅலுவலர் விஸ்வமித் விஜு உத்தரவின்பேரில் அவர்கள் இருவருக்கும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : forest ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...