×

ஆனைக்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

ஈரோடு, பிப்.4:ஈரோடு அடுத்துள்ள 46புதூர் ஆணைக்கல்பாளையத்தில் எல்ஐசி நகர், தாமரைநகர், லிபர்டி அவென்யூ, சபரி கார்டன், ஆயுதப்படை வளாகம், காவலர் குடியிருப்பு என சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் ஏற்கனவே ஆணைக்கல்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் புதிதாக ஒரு கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

Tags : store ,Tasmac ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...